Wednesday, November 14, 2007

4th thirumurai

திருமாற்பேறு
திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்ததேவாரப்பதிபங்கள்
நான்காம் திருமுறை

மாணிக் குயிர்பெறக் கூற்றை யுதைத்தன மாவலிபால்
காணிக் கிரந்தவன் காண்டற் கரியன கண்டதொண்டர்
பேணிக் கிடந்து பரவப் படுவன பேர்த்தும·தே
மாணிக்க மாவன மாற்பே றுடையான் மலரடியே.

கருடத் தனிப்பாகன் காண்டற் கரியன காதல்செய்யிற்
குருடர்க்கு முன்னே குடிகொண் டிருப்பன கோலமல்கு
செருடக் கடிமலர்ச் செல்விதன் செங்கம லக்கரத்தால்
வருடச் சிவப்பன மாற்பே றுடையான் மலரடியே.

No comments: